முல்லைபெரியாறு-முழு வரலாறு:
தமிழ்நாட்டில் வறட்சியால் தவிக்கும் தென்மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக -கேரளா எல்லையில் பெரியாறு நதியின் குறுக்கே கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானமும் ஆங்கிலேயர் அரசின் சென்னை மாகாண கவர்னரும் கடந்த 1886-ம் ஆண்டில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி 1895-ம் ஆண்டில் முல்லைபெரியாறு அணை கட்டிமுடிக்கப்பட்டது .
இந்த ஒப்பந்தத்தின்படி அணையில் தேக்கப்படும் தண்ணீர் தமிழகத்திற்கு சொந்தம் அணையில் நீர் தேங்கும் சுமார் 8ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பிற்காக சமஸ்தானத்துக்கு சென்னை மாகாண நிர்வாகம் ஆண்டிற்கு 42ஆயிரத்து 963ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்
முல்லை பெரியாறு அணை தென்தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது .சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வறட்சியின் காரணமாக ஏற்பட்ட பஞ்சத்தின் கோரப்பிடியில் சிக்கி தென்மாவட்ட மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர் அந்த பகுதி மக்களின் பசியை போக்க கிடைத்த அட்சய பாத்திரம் தான் முல்லை பெரியாறு அணை இந்த அணை கட்டப்பட்ட பிறகுதான் அவர்கள் வயிறார சாப்பிட முடிந்தது .
இந்தஅணை சாதாரண செங்கல்லாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்டதல்ல .ஏழை தமிழ் மக்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவான நீர்த்தேக்கம் இது .அணை கட்டும் பணியில் ஈடுபட்ட எத்தனையோ தமிழர்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் .ஆனால் அவர்களின் தியாகம் வீண் போகவில்லை அது அவர்களுடைய சந்ததிகளுக்கு வாழ்வளித்து கொண்டிருக்கிறது .
மதுரை மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையான கேரள மலைப் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு ஆற்றுப்படுகை மலைப்பாறைகளுக்கு இடையில் உற்பத்தியான நதி கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கி ஓடி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வழியாகச்சென்று அரபிக்கடலில் கலந்தது .இப்படி கலந்த பெரிய ஆறே பெரியாறு என அழைக்கப்பட்டது .இந்த ஆற்றின் குறுக்கே அணையை கட்டி அணையில் தேங்கும் நீரை மலையை குடைந்து சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றில் கலக்க செய்வதே பெரியாற்று திட்டமாகும் .
இந்நிலையில் 1810ம் ஆண்டு ஏப்ரல் மாதம்முதல் தேதியிலிருந்து 1811ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிவரை ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தால் 56 ஆயிரத்து 135 பேர் இறந்தனர் .
மதுரை திண்டுக்கல் பகுதிகளில் 1813ம் ஆண்டில் இதேபோல உருவான பஞ்சம் உருவான நேரத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் என்பதால் அபோதைய மதுரை கலெக்டர் வருவாய்துறைக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அடிக்கடி தாக்கக்கூடிய பஞ்சம் உழைக்கக்கூடிய மக்களை பரிதாபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் .
இந்த பஞ்சத்தால் தென்மாவட்ட மக்களில் 1லட்சத்து 50ஆயிரம் பேர் பாம்பனில் கூடி இலங்கைக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடம்பெயர்ந்தனர் .இந்த பரிதாபகரமான பொருளாதார சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காப்பற்றுவதற்கு பெரியாறு திட்டம் ஒன்றே வழியென ஆங்கிலேயர்கள் முடிவு செய்து அதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடதொடங்கினர் .
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் திருவிதாங்கூர் அரசாங்கத்திற்கும் ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டது .இவ்வுடன்படிக்கையின் முக்கிய அம்சம் என்னவென்றால் 999 வருடங்களுக்கு இந்த உடன்படிக்கை செல்லும் என்றும் 2885 பின்னர் மீண்டும் குத்தகை நீடிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
1867-மேஜர் ரைவ்ஸ் பெரியாறு நதியின் குறுக்கே ஒருஅணைகட்டி தேங்கும் நீரை கிழக்கில் மேட்டுப்பகுதியாக இருக்கும் இடத்தில் திறப்பு ஏற்படுத்தி திருப்பிவிடதிட்டம்தீட்டினார்.இந்தஆய்வு அறிக்கையைபெற்றுக்கொண்ட அரசுஇந்தபணியை சுமித்என்ற மற்றொருபொறியாளரிடம் ஒப்படைத்தது.
சுமித்அந்தஇடத்திற்குசெல்லக்கூடிய பாதுகாப்பான சாலைகளைசிறிதுதூரத்திற்கு அமைத்தார்.இவர்1872-ல்175அடிஉயரமுடையஅணைகட்டி433அடிநீளத்திற்கு,நீர்செல்லும்பாதாளகுகைவழியைஅமைக்கதிட்டம்தீட்டினர்.
ஆங்கிலஅரசு
ஜான்பென்னிகுக்என்பவரையும்இத்திட்டத்தில்இணைத்தது.ஜான்பென்னிகுக் மற்றும்சுமித்ஆகியோரிடம் பெரியாறுஅணைசம்மந்தமாக வெவ்வேறு அறிக்கைகளை தயார்செய்துகொடுக்குமாறு ஆங்கிலஅரசுஉத்தரவிட்டது.
இவ்விரண்டு பொறியாளர்களில் பென்னிகுவிக் கொடுத்த அறிக்கையில் விவரமாகவும் விரிவாகவும் இருந்தது.நீரைஅணைகட்டி திருப்புவதற்கான அதிநுட்பம்வாய்ந்த தலைசிறந்த அறிக்கையை பென்னிகுவிக் அரசாங்கத்திற்கு அளித்திருந்ததே அதற்குகாரணம்.
இந்தஅறிக்கையில்திருப்திஅடைந்தஅரசாங்கம் இந்ததிட்டத்தை தீட்டிய பென்னிகுவிக்கிடமே அதுவரை தயாரிக்கப்பட்ட அணைத்திட்டம் தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் ஒப்படைத்தது .பென்னிகுவிக் இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் இறங்கினார் .அணைகட்டும் வேலை 1887 -ல்தான் தொடங்கப்பட்டது .சென்னை மாகாண ஆளுநரான கண்ணிமாரப்பிரபுவும் சென்னை மாகாண தலைமைசெயலாளரான கேஸ்டேட்வும் தொடக்க விழாவில்பங்கேற்றனர்.
அணைகட்டும்பணி தொடங்கியவுடன் நியமிக்கபட்டுஇருந்த பொறுப்புள்ள அதிகாரிகள் பலர் சொல்லமுடியாத துன்பங்களையும் கஷ்டங்களையும்அனுபவித்தனர்.இக்காரணங்களால்கட்டுமான பணிகள் மெதுவாக நடைபெற்றன.
பணியாற்றிக்கொண்டுஇருந்த பணியாளர்களிடம் தோற்று நோய்கள் பரவதொடங்கின .இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாக நேரிட்டது.
பெரியாறு கட்டுமானபணிக்கு தேவையான பாகங்களை இங்கிலாந்துநாட்டில் இருந்துபொறுப்புள்ள அதிகாரிகள் கொண்டுவந்த பிறகுஅதனைஅணை கட்டும்இடத்திற்கு எடுத்துசெல்ல போதிய வகையில் போக்குவரத்துவசதிகள் இல்லாததால் பெரியாற்றுக்கு செல்லும் செங்குத்தான 15 கிலோமீட்டர் மலைபாதையில் ஏறுவது கடினமான வேலையாக இருந்தது .
அனைத்துபொருட்களும் மலையடிவாரத்திற்கு அருகில்கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நீராவியின் மூலம் இயங்ககூடிய ராட்சதஎந்திரங்கள்மூலம்இழுப்புகயிறுகள் வழியாக பொருட்கள்எடுத்துசெல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு எடுத்து செல்லப்பட்ட பொருட்கள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அடித்துசெல்லப்பட்டுள்ளன.இது மட்டுமல்லாது பென்னிகுவிக் மனைவிதன்னுடைய நகைகளைமற்றும் சொத்துக்களைவிற்று
அந்தபணத்தையும் அணைக்கட்டு திட்டத்திற்கு நன்கொடையாக அளித்தார் .இவ்வாறு பெருமுயற்சிக்குபின்பு 10-10-1895 அன்று மாலை ஆறு மணிக்கு முல்லைபெரியாறு அணையில் மதுரை மாவட்டத்திற்கு தண்ணீர்திறந்து விடப்பட்டது.
பத்தொன்பதாம்நூற்றாண்டில் சென்னை நீர்பாசன துறையின் மிகச்சிறந்த சாதனையாக இத்திட்டம் கருதப்பட்டது.இத்திட்டத்தால் தேனி,திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம்,சிவகங்கைமாவட்டங்கள்
பயன்பெறுகின்றன
.இப்பெரியாறுஅணைக்கட்டு திட்டத்தில்தான் மலையை குடைந்து இந்த அளவு தண்ணீர் திருப்பப்பட்டது உலகத்திலேயே முதல்முறையாக நடைபெற்றது.முல்லைபெரியாறு அணையின் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா அணைககட்டுகளிலும் அணைமுன்னால் அமைந்திருக்கும் பின்பகுதி பாறை அல்லது இயற்கை தடுப்புகளால் தடுக்கப்பட்டிருக்கும் அனால் இந்த அணைகட்டோ பெரியாற்றின் பின் பகுதியில் அமைந்திருக்கிறது.
பெரியாறு மற்றும் வைகை அணையால் கம்பம் பள்ளத்தாக்கு முதல் ராமநாதபுரம் வரையுள்ள ஒரு லட்சத்து நாற்பத்து ஆறாயிரம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் செழிப்பான பாசன வசதிபெறுகின்றன .ஒரு காலத்தில் வறட்சிமிகுந்த பகுதியாக திகழ்ந்த இப்பகுதி தற்போது அளவிற்குஅதிகமாக உணவு தானியங்கள் உற்பத்தி செய்யும் நிலையில் உள்ளது.